Friday, October 5, 2018

தமிழ் மன்ற விழா

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா 23.09.15 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார் மொழித்துறைத் தலைவர் பேரா.த.திலீப்குமார் அவர்கள். கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.பாலுசாமி அவர்கள் தலைமையேற்று மாணவர்கள் வாசிப்புத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கூறினார். இக்கல்லூரியின் காட்சித்தொடர்பியல்  துறையின் முன்னாள் மாணவர் தீபன் அவர்கள் எழுதிய ஒரு பயணம் போதாது என்ற பயண நூலினைப் பாராட்டிச் சிறப்புச் செய்யப்பெற்றது.
பின்பு, சிறப்பு விருந்தினர் ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் சில எண்ணங்களை விதைத்தார். அவ்வெண்ணங்களுள் வரலாறு, எழுச்சி, பண்பாடு, மன உறுதி என எண்ணிறந்தன. அவர்கள் அளித்த முக்கிய செய்தியாகக் கருதத்தக்கன இரண்டு. ஒன்று: உண்மை நாயகன் (Real Hero) பாபர் அலியின் (கல்கத்தா) தொண்டு. அவன் ஒன்பது வயது சிறுவனாக இருந்த பொழுது ஒரு கிராமத்து இளைஞர்கள் அனைவருக்கும் கல்வி அறிவு தந்தது. மற்றொன்று: திருக்குறளின் சிறப்பு. உலக இலக்கியங்களில் பைபிள், குர்ரான் மதக் கருத்தியலால் மொழியாக்கம் செய்யப்பெற்றவை. ஆனால் திருக்குறள் அதன் சிறப்புக்கருதி மொழியாக்கம் செய்யப்பெற்றது. ஆக, பன்முறை நூல் வாசிப்பு ஒன்றே ஒருவனைச் செம்மையாக்கும் என்று கூறினார். இறுதியாக முனைவர் த.அன்புச்செல்வி அவர்கள் நன்றி கூற விழா நிறைவுற்றது.
பிற ஒளிப்படங்கள்




No comments:

Post a Comment

தமிழ் மன்ற விழா

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா 23.09.15 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விழாவிற்கு ...